Friday, August 14, 2009

முதல் நாள் பள்ளியில்...

முதன் முறையாக ஸ்கூலுக்கு சென்று விட்டு திரும்பிய பந்தாசிங் தன் தந்தையிடம் வந்து அன்று ஸ்கூலில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். "அப்பா இன்றைக்கு ஸ்கூலில் ஸ்பெல்லிங் பற்றி கிளாஸ் எடுத்தார்கள், அதில் நான் மட்டும்தான் எல்லா எழுத்தையும் சரியாக சொன்னேன். மற்ற பசங்கள் யாருமே சரியா சொல்லவில்லை. அது ஏன்பா, நான் சர்தார் என்பதாலா?." அதற்க்கு அப்பா சொன்னார்,

"இல்லை மகனே, நீ ஒரு இன்டலிஜென்ட் பாய் அதனால்தான் சரியாக சொல்லி இருக்கிறாய். (அறிவு கொழுந்துங்கிறார்)..""அப்பா, பிறகு கணக்கு கிளாஸ் நடந்தது. அதில் எல்லோரையும் 1-லிருந்து 20-வரைக்கும் சொல்ல சொன்னார்கள். ஆனால் எல்லோரும் 1 லிருந்து 10 வரைக்கும்தான் சொன்னார்கள், நான் மட்டும்தான் ஒழுங்கா 20 வரைக்கும் சொன்னேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?". அப்பா, "நோ.. நோ.. மகனே, நீ ஒரு அறிவு கொழுந்துடா, அதனாலதான்..""அப்பா, இன்று மெடிக்கல் செக்-அப் கூட நடந்தது.. அங்க வந்த எல்லா பசங்களும் என்னைவிட ரொம்ப குட்டையா இருந்தாங்க, ஆனா நான் மட்டும் அவங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருந்தேன், அது ஏம்பா நான் சர்தார் என்பதாலா?".

அப்பா சொன்னார், "இல்லை மகனே, உனக்கு வயசு 31 ஆகிறது இல்லையா? அதனாலதான்..".

No comments:

Post a Comment